எல்லாத்தையும் அந்த சாமி பாத்துப்பாருன்னு இருப்பவங்க அதிகம் அலட்டிக்கமாட்டாங்க.
கடன், கல்யாணம், குழந்தை, வேலை உட்பட எப்படி வேதனை வந்தாலும் கடவுள் காப்பாத்திட்டார் என்று சொல்வதற்கு அவர்களிடம் ஒரு கதை இருக்கும்.
அப்படி ஒரு கதை உங்களிடம் இருக்கா?
அந்த நேரத்துல கடவுள்தான் என்னை காப்பாத்தினாரு, என்று சொல்லாதவரே இல்லை.
எல்லோருக்கும் அப்படி ஒரு தருணம் இருக்கும். உங்களுக்கும்தான்!
உங்களை கடவுள் தான் காப்பாற்றினார் என்று நீங்கள் உணர்ந்த தருணம் எது? எதிலிருந்து கடவுள் உங்களை காப்பாற்றினார்?
அறிமுகமாகிறார் விஹான்!
இன்று வெளியாகும் மார்க்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் விஹான் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்
அவர் நமது ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ”யாதெனக்கேட்டேன்” படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் சுபாஷ்கய் மும்பையில் நடத்தும் ”விசிலிங் ஹுட்ஸ்” கல்லூரியில் நடிப்பு பயிற்சி பெற்றவர். மிகுந்த திறமைசாலி.
கவியரசு கண்ணதாசனின் பேரன் முத்தைய்யா கண்ணதாசனுடன் இணைந்து அருமையாக நடித்திருக்கிறான்.
ஷனாயா, விஷாலி, முத்து, சுபா, சித்தன் கார்த்திஷ் என்று எங்கள் டீமே ஜாலியான இளமையும் அனுபவமும் கலந்த டீம். எங்கள் எல்லோருக்குமே இன்று மகிழ்ச்சியான நாள்.
அவர் வெற்றிபெற வேண்டுமென்று யாதெனக்கேட்டேன் படக்குழு மற்றும் ஐ.எஸ்.ஆர் வென்சர்ஸ் சார்பாக வாழ்த்துகிறோம்.