பெற்றோர்களே கவனம்!
உங்கள் குழந்தைகளை மீண்டும் பலிகேட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சிறு மன்னிப்பு கேட்கும் மனநிலையில் கூட இல்லை. ஆனாலும் உங்கள் குழந்தைகளை மீண்டும் பலி கேட்கும் முயற்சிகளை கைவிடவில்லை. நான் இணைத்துள்ள செய்தி உண்மையா? பொய்யா என எனக்குத் தெரியாது. அது பொய்யாகவே இருந்தாலும், இந்தச் சூழலில் இது போல சிந்திக்கும் எவரும் மனித மிருகங்களே!
அவர்களுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். பதுங்கியபடியே உங்கள் குழந்தைகளை கும்பலாக மாற்றி, அவர்களுக்கு நடுவில் வெளிவந்து, தாங்கள் தப்பிக்கலாம் என நினைக்கிறார்கள்.
உங்கள் குழந்தைகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்!
- ISR Selvakumar